Protected by Copyscape Website Copyright Protection

Tuesday, September 6, 2016

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று பலரும் வாழ்த்துவதுண்டு. நாமும் பதினாறா? என்று கிண்டலாக சிரிப்போம்.

உண்மையில் அதன் பொருள் என்ன? பதினாறு பேறுகள். பதினாறு பிள்ளைகள் அல்ல. நேற்று நண்பர் ஒருவர் இதுபற்றி என்னிடம் கேட்டார்.

பதில் இதோ :

பதிலை நான் சொல்ல வேண்டாம். அபிராமி பட்டர் சொல்கிறார்:
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வராத நட்பும்,
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்,
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்,
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
அலையழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிக்கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே..

செய்யுளின் பொருள்:

1. கலையாத கல்வி
2. குறையாத வயது
3. கபடில்லா நட்பு
4. கன்றாத வளமை
5. குன்றாத இளமை
6. பிணியில்லா உடல்
7. சலிப்பில்லா மனம்
8. அன்பான வாழ்க்கை துணை
9. தவறாத மக்கட்பேறு
10. குறையாத புகழ்
11. வார்த்தை தவறாத நேர்மை
12. தடையில்லாது தொடரும் கொடை
13. தொலையாத செல்வம்
14. பராபட்சம் இல்லாத அரசு
15. துன்பம் இல்லாத வாழ்க்கை
16. இறைவன் மேல் பக்தி

இதுதான் பெருவாழ்வு தரும் பதினாறு.
ஸ்வாமி சரணம்
Aravind Subramanyam

No comments:

Post a Comment