Protected by Copyscape Website Copyright Protection

Tuesday, April 28, 2020

கேரளத்தின் 108 சிவாலயங்கள்

கேரளத்தின் 108 சிவாலயங்கள்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

பரசுராமர், பரமேஸ்வரனின்
சிஷ்யன் ஆகவும் பக்தனாகவும் விளங்கினார். ஈசனின் அனுகிரகத்தால் பரசு என்று சொல்லக்கூடிய கோடாலியைப் பெற்று, அதன்மூலம் பார்க்கவ ராமனாக இருந்தவர் பரசுராமன் ஆக மாறினார்.

21 தலைமுறை க்ஷத்ரியர்களை வதம் செய்த தோஷத்திலிருந்து விடுபட வேண்டி, பரமசிவனை பூஜித்து தான் வென்றெடுத்த மொத்த பூமியையும் காச்யபருக்கு தானமாக கொடுத்தார்.

பின்னர் தனக்கென கேரள ராஜ்யத்தை உருவாக்கிய பிறகு அங்கே பிரதான ஆராதனா தேவதையாக பரமேஸ்வரனை
ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து 108 சிவாலயங்களை உருவாக்க எண்ணினார்.

ஏற்கனவே துர்க்காலயங்களையும், சாஸ்தா ஆலயங்களையும் உருவாக்கிய பரசுராமர்,
கேரள ஆராதனா முறைகளில் பரம புருஷனாக பரமேஸ்வரனை விதித்து அவரது 108 ஆலயங்களையும் பிரதிஷ்டை செய்தார்.

108 துர்கா ஆலயங்களை போலவே 108 சிவ ஆலயங்களுக்கும் வரிசைப்படுத்தும் ஒரு துதி உண்டு.
துர்காலய துதி போல இதை அனுதினமும் பாடாவிட்டாலும்,
பல சிவபக்தர்கள் இதை தொடர்ந்து பாராயணம் செய்துதான் வருகிறார்கள்.

நாம் ஏற்கனவே கண்ட துர்காலய ஸ்துதி போலவே, இந்த சிவாலய ஸ்துதியும், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவாலயங்களை வரிசைப் படுத்துகிறது.

(வைக்கம், ஏற்றுமானூர், தளிப்பறம்பா போன்ற பிரபலமான சிவ க்ஷேத்திரங்கள் இதில் வரிசைப்படுத்த படுவதுடன்,
கொடுங்கல்லூர்,
திருமாந்நாம்குந்நு
போன்ற பகவதியின் பெயரால் இன்று பிரபலமாக அறியப்படும் தலங்களும் கூட
ஆதியில் சிவாலயங்களே என்பதை இந்த வரிசை உறுதிப்படுத்துகிறது. -V. அரவிந்த் ஸுப்ரமண்யம்)

வடக்கே கோகர்ணத்தையும்
தெற்கே சுசீந்திரத்தையும் இந்த வரிசையில் இணைத்து இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இந்தப் பாடலுக்கும் பலச்ருதி இருக்கிறது.

இப்பறஞ்சவ நூற்றியெட்டும் பக்தியொத்து படிக்குவோர்
தேஹம் நசிக்கிலெத்தீடும் மஹாதேவன்டெ சன்னிதெள

துர்க்கையின் பாடலில் ஆயுள் ஆரோக்கியம் புத்திர சந்தானம் போன்றவை எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், இங்கே ஞான மூர்த்தியான ஈஸ்வரனின் பாடல் என்பதால், தெளிவாக
இதை பக்தியோடு படிப்பவர்கள்
தங்கள் ஆயுள் முடிந்ததும் நேரடியாக சிவனின் சந்நிதானத்தை அடைவார்கள் என்று கூறி
விட்டார்கள்.

பிரதோஷத்தில் ஜபிச்சாகிலசேஷதுரிதம் கெடும்
யத்ர யத்ர சிவக்ஷேத்ரம் தத்ர தத்ர நமாம்யஹம்

பிரதோஷ காலத்தில் இதைப் படிப்பதால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்குகிறது. இந்த 108 மட்டுமல்லாமல், வேறு எங்கெல்லாம் சிவ க்ஷேத்திரங்கள் இருக்கிறதோ அவை எல்லாவற்றுக்கும் வணக்கம் என்று கூறி இந்த துதி முடிகிறது.

நூற்றியெட்டு சிவாலயங்கள்

ஸ்ரீமத்தக்ஷிணகைலாசம் ஸ்ரீபேருரு ரவீஸ்வரம்
சுசீந்திரம் சொவ்வரம் மாத்தூர் த்ரிப்ரங்கோட்டதா முண்டையூர்

ஸ்ரீமந்தாம்குன்னு சொவ்வல்லூர் பாணாஞ்சேரி கொரட்டியும்
பொராண்டக்காட்டு செங்கன்னூர் கொல்லூரும் திருமங்கலம்

திருகாரியூர் குன்னப்ரம் ஸ்ரீவெள்ளூர்அஷ்டமங்கலம்
ஐராணிக்குளவும் கைநூர் கோகர்ணம் எறணாகுளம்

பாரிவாலூரடாட்டூம் நல்பரப்பில் சாத்தமங்கலம்
பாராபரம்பு திருக்கூரு பனையூரு வயட்டில

வைக்கம் ராமேஸ்வரம் மற்றும் எட்டுமானூர் எடக்கோளம்
ச்செம்மந்தட்டாலுவா பின்னே திருமிட்டக்கோட்டு சேர்தலா

கல்லாட்டுப்புழா திருகுன்னு செருவதூரு பொங்கணம்
திருக்கபாலேஸ்வரம் முன்னுமவிட்டத்தூர் பெரும்மலா

கொல்லத்தும் காட்டகம்பாலா பழையன்னூர் பேரகம்
ஆதம்பள்யேர் அம்பளிக்காடு சேராநெல்லூர் மாணியூர்

தளிம்பாலும் கொடுங்கல்லூர் வஞ்சியூர் வஞ்சுளேஸ்வரம்
பாஞ்சார்குளம் சிட்டுகுளம் ஆலத்தூரத கொட்டியூர்

திருப்பாளூர் பெருந்தட்டா திருத்தாலா திருவல்லயும்
வாழப்பள்ளி புதுப்பள்ளி மங்கலம் திருநக்கரா

கொடும்பூர் அஷ்டமிக்கோவில் பட்டணிக்காட்டு நஷ்டயில்
கிள்ளிகுரிசியும் புத்தூர் கும்பசம்பவமந்திரம்

சோமேஸ்வரஞ்சவெங்காலூர் கொட்டாரக்கர கண்டியூர்
பாலையூர் மஹாதேவநல்லூரத நெடும்பூரா

மண்ணூர் திருச்சளியூர் ஷ்ரிங்கபுரம் கொட்டூரு மம்மியூர்
பறம்புந்தள்ளி திருநாவாய்க்கரீக்காட்டு தென்மலா

கோட்டப்புறம் முதுவரவளப்பாய் சேந்தமங்கலம்
திருக்கண்டியூர் பெறுவனம் திருவால்லூர் சிறைக்கலும்

பலச்ருதி:

இப்பறஞ்சவ நூற்றியெட்டு பக்தியொத்து படிக்குவோர்
தேஹம் நசிக்கிலெத்தீடும் மஹாதேவன்டெ சன்னிதெள

பிரதோஷத்தில் ஜபிச்சாகிலசேஷதுரிதம் கெடும்
யத்ர யத்ர சிவக்ஷேத்ரம் தத்ர தத்ர நமாம்யஹம்

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

Spl Thanks to : Ramesh Anna who gave the text

Super Thanks to Raju and Abhishek Ramanarayanan who transliterated the Malayalam script to Tamil.

No comments:

Post a Comment